"மதுரையும், சபாநாயகர்களும்"
சென்னை:
சபாநாயகர்களைத் தரும் மாவட்டமாக மாறி விட்டது மதுரை.
மதுரை மாவட்டத்திலிருந்து மற்றுமொறு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் 12-வது சட்டசபைசபாநாயகராக டாக்டர் கா.காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலிருந்துதேர்ந்தெடுக்கப்படும் நான்காவது சபாநாயகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது டாக்டர் தமிழ்க்குடிமகன் சபாநாயகராகபதவியேற்றார். மதுரை யாதவர் கல்லூரி முதல்வராக இருந்த தமிழ்க்குடிமகன் சிறந்த தமிழறிஞர். சபாநாயகராகஇருந்து பின்னர் அமைச்சர் பதவியை வகித்தவர்.
1991 தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்தது. ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக ஏற்பட்ட அலையால்அதிமுக அமோக வெற்றியைப் பெற்றது. ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சிக்காலத்தில் சபாநாயகர்பதவியை சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக பதவி வகித்தார். இவர் மதுரை மாவட்டம் சேடப்பட்டி என்றஊரைச் சேர்ந்தவர். சபாநாயகர் பதவியில் இருந்த சேடப்பட்ட முத்தையா பலவித சர்ச்சைகளுக்கு உட்பட்டார்.
1996 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் அலைஅடித்ததால் திமுக கரை சேர்ந்தது. மதுரையைச் சேர்ந்த, பாரம்பரியம் மிக்க நீதிக் கட்சித் தலைவர் பி.டி.ராஜனின்புதல்வர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டர். பக்தி மான் ஆன பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுக்கு சபாநாயகர் பதவி திணிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால் திறம்பட சபையைநடத்தி அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றார் பி.டி.ஆர்.
2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைப்பிடித்துள்ளார். சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான கா.காளிமுத்துசபாநாயகராகப் பதவியேற்கவுள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர். முன்புதிமுகவில் இருந்தார். அதிமுக பிறந்தபோது அதில் ஐக்கியமானார். தற்போது ஜெயலலிதாவின் அன்புக்குப்பாத்திரமானவர். அவருக்கு அறிக்கைகள் எழுதித் தருகிறார் என்று கூட ஒரு பேச்சு உண்டு.
முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து மேலும் ஒரு சபாநாயகர் வந்துள்ளார். பைந்தமிழால்சபையை எழிலுறச் செய்வார் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications