தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் நீடிப்பார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று மத்திய உள்துறைஅமைச்சர் எல்.கே. அத்வானி புதன்கிழமை கூறினார்.

டெஹல்கா டாட் காம் ஆயுதபேர ஊழல் வழக்கில் மிஸ்ரா பெயரும் அடிபட்டதால், அவர் பதவியிலிருந்துவிலக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

"பிரதமரின் முதன்மைச் செயலாளராகவும் பிரஜேஷ் மிஸ்ரா இருந்து வருகிறார். தேசியப் பாதுகாப்புக் கவுன்சில்பிரதமரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து வருகிறது. இதனால் தேசியப் பாதுகாப்பு ஆலோசராக மிஸ்ராவேஇருந்து வருவதுதான் நல்லது. அதனால்தான் அவர் அப்பதவியில் நீட்டிக்கப்படுகிறார்" என்று அத்வானி கூறினார்.

ஒரே நேரத்தில் இரு முக்கியப் பொறுப்புக்களை பிரஜேஷ் மிஸ்ரா வகிக்கக்கூடாது என்று தேசியப் பாதுகாப்புஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கே. சுப்பிரமண்யம் ஆயுத பேர ஊழல் விவகாரம் வெளி வருவதற்கு முன்பேகூறியிருந்தார்.

தகுந்த நேரம் வரும்போது, இந்த இரு பதவிகளையும் வெவ்வேறு நபர்கள் வகிப்பார்கள் என்றும் அத்வானிதெளிவுபடுத்தினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+