ராஜஸ்தானை உலுக்கும் வறட்சி

Subscribe to Oneindia Tamil

சித்தோர்கர்:

ராஜஸ்தானில் இந்த ஆண்டு கடும் வெயிலால் ஏற்பட்டுள்ள வறட்சியைப் போக்குவதற்காக, கிடைத்த வேலைக்குச்செல்கின்றனர் அம்மாநிலப் பெண்கள்.

முக்கியமாக, சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு விவசாயம்தான் தெரிந்த ஒரே தொழில். வறட்சியால்விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை வந்தால், வெறுமனே சும்மா இருப்பார்களே ஒழிய, வேறு எந்த வேலைக்கும்போக மாட்டார்கள். பரம்பரை பரம்பரையாக இப்படித்தான் நடந்து வருகிறது.

ஆனால் இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை எதிர் கொள்ளத் தயாராகஇருப்பார்களாம்.

மாநில அரசு நடத்தி வரும் பல கட்டுமானப் பணிகளில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 40தொழிலாளர்கள் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறார்கள் என்றால், அதில் 34 பெண்கள் இருப்பார்கள்.

ஒரு நாளைக்கு 60 ரூபாய் இவர்களுக்குச் சம்பளம் கிடைக்கிறது. அதுவும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைதான்அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால், இவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவ்வளவுஎளிதில் தண்ணீர் கிடைக்காது.

தண்ணீர் தாகத்தைத் தணிப்பதற்காக மட்டும் 5 முதல் 7 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்து செல்லவேண்டியிருக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள 2,415 கிராமங்களும் கடுமையான வறட்சியால்பாதிக்கப்பட்டுள்ளன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+