For Daily Alerts
Just In
புதுவை முதல்வராக பதவியேற்றார் சண்முகம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் முதல்வராக காங்கிரஸ் தலைவர் சண்முகம் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார்.
முதல்வருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் பாண்டிச்சேரி ஆளுநரானலெப்டினன்ட் கவர்னர் டாக்டர் ரஜனி ராய்.
மற்ற அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா மற்றொரு நாளில் நடைபெறும்.
உள்ளூர் தலைவர்கள் தவிர, அதிமுக எம்பி ஓ.எஸ். மணியன், தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,தமாகாவைச் சேர்ந்த பி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரங்கசாமி மூப்பனார் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் பாண்டிச்சேரி சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]