சென்னையில் 2 பேர் தற்கொலை
சென்னை:
சென்னையில் குடும்பப் பிரச்சினை காரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள வெங்காத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). விவசாயியாக இருக்கிறார்.இவருக்கும், இவரது அண்ணனுக்கும் இடையே பயிர் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறில் அண்ணனிடம் கோபித்துக் கொண்டு சென்னை கப்பேரிலுள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்ரமேஷ். அங்கு வந்தும் கூட கவலைப்பட்டவாறே இருந்து வந்தார் ரமேஷ். இந்நிலையில், வீட்டிலிருந்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ்.
ரமேஷின் மனைவி கலா கொடுத்த புகாரின் அடிப்படையில், கப்பேர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (59), தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத்தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு சுகிர்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனுஷ்கொத்தனாராக இருந்து வந்தார்.
விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications