For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த சண்டை நிறுத்தம் வாபஸ் பெற்றதையடுத்து,குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள லஹாத் என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள்மீது, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்களும் திருப்பித் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத்தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும்வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தில் ராணுவ வீரர்களுக்கு எவ்வித சேதமும்ஏற்படவில்லை.

முன்னதாக, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்கிறது என்று பிரதமர் வாஜ்பாய்கூறியதும், அவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்கு அழைப்பு விடுத்ததும்நினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X