வீரப்பன் மனைவி ஜெயலலிதாவுக்கு கடிதம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீரப்பன் திருந்தி வாழ சந்தர்ப்பம் கேட்டு அவரது மனைவி முத்துலட்சுமி, ஜெயலலிதாவிற்கு கடிதம்எழுதியுள்ளார்.

சந்தனக் கடத்தல் "மாயாவி வீரப்பனை தேடும் வேட்டையில் அதிரடிப் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மேட்டூர் அரசு மருத்துவமனை அருகே உள்ளபகுதியில் வசித்து வருகிறார்.

அவரது மனைவி தற்போது வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குஎழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதுதான் எனது கணவரைப் பிடிக்கும் பணியில்அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். அதிகாரிகள் தவறான முறையில் அப்போது செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்குஅவப் பெயரை ஏற்படுத்தி விட்டனர்.

தற்போது அவ்வாறு நடக்கமால் இருக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளிலிருந்தும் இதன் மீது ஜெயில் த ண்டனை பெற்றும் கூட தமிழக மக்கள்மீண்டும் அவரை முதல்வராக்கி வாய்ப்புக் கொடுத்துள்ளார்.

இதே போல சந்தர்ப்ப சூழ்நிலையால், குற்றவாளியாகக் காட்டில் திரியும் எனது கணவருக்கு பொது மன்னிப்புவழங்க வேண்டும். இதை பாதிக்கப்பட்ட பெண் என்ற முறையில் பெண் என்ற முறையில் என்னைப் போன்றபெண்ணிடம் உரிமையோடு கேட்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+