முஷாரப் இந்தியாவுக்கு வருவதை வரவேற்கிறது பாக்.
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பதை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இனாமுல் ஹக் நிருபர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் சண்டை நிறுத்தம்அறிவித்திருந்தது இந்திய அரசு.
இது 6 முறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் புதன்கிழமையுடன் சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பாதுகாப்புதொடர்பாக நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முஷாரப்பை இந்தியா அழைத்துள்ளது. இதை பாகிஸ்தான் வரவேற்கிறது.
முஷாரப்பும், நாங்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து முறையான அழைப்புவந்தவுடன் முஷாரப் இந்தியா செல்வார் என்றார்.