பொருளாதாரத்தை சீர்குலைத்தது திமுக அரசு .. ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த முறை அதிமுக ஆட்சியிலிருந்து விலகியபோது வைத்திருந்த பணத்தை நாசமாக்கி, பொருாளாதாரத்தைசீர்குலைத்து விட்டது திமுக அரசு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், 1996ம்ஆண்டு அதிமுக அரசு பதவியிலிருந்து இறங்கியபோது, ரூ. 874 கோடி, ரொக்கப் பணத்தை விட்டு விட்டுச்சென்றது.

ஆனால் அதற்குப் பிறகு வந்த திமுக அரசு இந்தப் பணத்தை நாசமாக்கி, பொருாளாதார நிலையை மோசமாக்கிவிட்டது. அதிமுக அரசு போனபோது, பொருளாதார நிலை நல்ல நிலையில் இருந்தது. ஆனால் திமுகஅரசுக்காலத்தின்போது இது படு மோசமாகியுள்ளது.

திமுக அரசு பதவியிறங்கியபோது அரிசி மட்டும் ரூ. 1000 கோடிக்கு கையிருப்பில் இருந்ததாக முன்னாள்முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது தவறான தகவல்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில்பெண் சிசுக் கொலை வெகுவாக குறைந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்இந்த திட்டம் முற்றிலும் கைகழுவப்பட்டு விட்டது. எனவே தற்போதைய ஆட்சிக்காலத்தில் மீண்டும் தொட்டில்குழந்தைத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திட்டங்களில் பல எனது கனவுத் திட்டங்கள். வைராக்கியமாகநிறைவேற்றியாக வேண்டும் என்று நான் நினைத்திருந்த திட்டங்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாகநிறைவேற்றப்படும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+