ராஜஸ்தான் தீ விபத்தில் சேதம் 100 கோடியை தாண்டுகிறது
சூரத்கார்:
ராஜஸ்தான் மாநிலம் பிர்தாவல் ராணுவ கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மிகப் பெரிய அளவில் சேதம்ஏற்பட்டுள்ளதாகவும், சேத மதிப்பு 100 கோடியைத் தாண்டும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராஜஸ்தான் ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு 100 கோடியைத் தாண்டும் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் சேத மதிப்பு எவ்வளவு என்று துல்லியமாகக் கண்டறிந்து தெரிவிக்கப்படும்.
இந்திய ராணுவத்துக்கு தேவையான அனைத்து வகை ஆயுதங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. ராஜஸ்தான்மாநிலத்தில் உள்ள சூரத்கார் இந்தியாவிலேயே மிகவும் வறட்சியான, வெப்பமான பகுதியாகும். இந்த கிடங்கில்வைக்கப்பட்டுள்ல துப்பாக்கி ரவைகள், ஏவுகணைகள் ஆகியவை பெருமளவில் சேதமடைந்துள்ளன.
இந்த ராணுவ கிடங்கியை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவு நிலங்களே பாலைவனங்களாக மாறி விட்டது.இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ராணுவ கிடங்கியில் இதே போல் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்பகுதி முழுவதும்இங்கு வேலை செய்பவர்களைத் தவிர யாரும் இந்த ராணுவ கிடங்கியில் அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் ராணுவம் மீட்புப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வேறுஇடங்களை தேடிச் சென்று விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications