ராணுவ கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை
டெல்லி,:
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார் அருகே பிர்தாவாலில் உள்ள ராணுவக் கிடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்துராணுவம் தனது புலனாய்வைத் தொடங்கியுள்ளது.
மேலும் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ வெள்ளிக்கிழமைகாலையுடன் முற்றிலுமாக அணைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த விவரமாவது:
ராணுவக் கிடங்கைச் சுற்றி சுமார் 12,000 கிராம மக்கள் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் ராணுவக் கிடங்கில்ஏற்பட்ட தீ விபத்தால் வேறு இடங்களுக்குக் குடியேறி விட்டனர்.
பிஹானர்-பாட்டின்டா ரயில்வே பாதை மூடப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தத்தீ விபத்தில் 100 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பல டன்கள் வெடிமருந்துகள், ஆயுதங்கள் தீக்கிரையாகின. இதனால் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான பலகோடிக்கணக்குப் பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்தன.
அடுத்த 48 மணி நேரத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதக்கிடங்கில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.