போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
சென்னை உள்பட பல மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை மட்டும் மொத்தம் 23 காவல்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். அடையாறு துணை கமிஷனர் மெளரியா, போலீஸ் தலைமையக உதவி ஐ.ஜியாகநியமிக்கப்பட்டார். அண்ணா நகர் துணை கமிஷனராக சேஷசாயி நியமிக்கப்பட்டார்.
சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். விழுப்புரம் டி.ஐ.ஜியாகஇருந்து வந்த சைலேந்திர பாபு, வட சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்து வந்த திரிபாதி சென்னை-தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.சென்னை போலீஸ் பயிற்சிக் கழக முதல்வராக இருந்த சக்திவேலு, சென்னை-வடக்கு துணை கமிஷனராகமாற்றப்பட்டார்.
கோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டார். அவர் லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார். கோவை கமிஷனராக நரேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டார்.
இதேபோல, நெல்லை, சேலம் போலீஸ் கமிஷனர்களும் மாற்றப்பட்டு விட்டனர். ஐ.ஜி.சேகர் நெல்லை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கமிஷனர் மேகநாதன், மனித உரிமை கமிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை போலீஸ் கமிஷனர் மட்டும்தான் இப்போதைக்குத் தப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications