ஊழலற்ற ஆட்சி தருவோம்: பாண்டி.முதல்வர் நம்பிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியை மிகச் சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும்,ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் என்றும் புதிய முதல்வர் ப.சண்முகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பாண்டிச்சேரியின் வளர்ச்சிக்காக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள காங்கிரஸ் அமைச்சரவை அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும். பொதுமக்களுக்குத் தேவையான பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாடடைவதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பாண்டிச்சேரியின் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை வளர்ச்சியடைய அனைத்து முயற்சிகளும்மேற்கொள்ளப்படும்.
பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் துறைமுகம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தப்பணிக்காக வெளிநாட்டிடமிருந்து நிதியுதவி பெறவும் திட்டமிட்டுள்ளோம்.
சிறு தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கவனித்துக் கொள்ளும்.கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் முன்னேற்றத்திற்காக கைவினைப் பொருட்கள் தொழிற்சாலைகள்நிறுவப்படும். இதனால் கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்புக்கள் பெருகும்.
பாண்டிச்சேரியில் நிலையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியமைய எங்கள் அரசு பாடுபடும்.
ஆறு மாதங்களுக்குள் நான் பாண்டிச்சேரியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாகத்தேர்ந்தெடுக்கப்படுவேன் என்றார் சண்முகம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications