மதுரையில் தொலைபேசி உடைப்புப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தொலைபேசி இணைப்புக்காக வாடகை முன் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து, தொலைபேசி உடைப்புப்போராட்டம் மதுரையில் நடந்தது.
தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் சார்பாக புதன்கிழமை மதுரை தல்லாகுளம் தொலைபேசிநிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடந்தது.
தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களிடம் 3 மாத வாடகையான ரூ.750 தற்போது முன் கட்டணமாகவசூலிக்கப்படுகிறது.
இதனால், வழக்கமாகக் கட்டும் 2மாத வாடகைக் கட்டணமான ரூ.500ஐயும் சேர்த்து, வாடகைக் கட்டணமாகரூ.1,250 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இந்தக் கட்டண முறையை பாரத் சஞ்சார் நிஜாம் நிறுவனம் அறிவித்துள்ளது.உடனே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications