கொளத்தூரில் மான் பிடிக்கச் சென்ற 3 பேர் கைது
சேலம்:
கொளத்தூர் அருகே வனப் பகுதியில் மான் பிடிக்கச் சென்ற 3 பேரை அதிரடிப்படை படையினர் கைது செய்தனர்.
கொளத்தூர் வனப் பகுதியில் மான் வேட்டைக்கு கருங்கல்லூரைச் சேர்ந்த ஒரு கும்பல் காட்டுக்குள் நுழைந்தது.இந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் வனப் பகுதியில் முள்ளம்பன்றி, முயல், மான் போன்ற விலங்கினங்களைவேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றினர்.
இவர்களை வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கண்டு, அவர்களைச் சுற்றி வளைத்தனர்.இதையடுத்து அந்தக் கும்பல், தப்பியோட முயன்றது. இதில், 3 பேர் தப்பி தலைமறைவாகி விட்டனர். 3 பேர்மாட்டிக் கொண்டனர்.
கருங்கல்லூரைச் சேர்ந்த குழந்தைசாமி (40), ரங்கசாமி (35), தங்கராஜ் (23) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் மான், முள்ளம்பன்றி இறைச்சிக்காக வேட்டையாட வந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில்குழந்தைசாமி காயத்துடன் இருந்துள்ளார்.
இவர்களை அதிரடிப்படையினர் தாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களைப் பிடித்தஅதிரடிப்படையினர், தப்பியோடிய குழந்தைசாமி 15 அடிப் பள்ளத்தில் விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளனர். காயமடைந்த குழந்தைசாமி மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைசாமி தாக்கப்பட்டதாக செய்தியை அறிந்த கருங்கல்லூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று பொதுமக்களைக் கட்டுப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications