For Daily Alerts
Just In
ஊர்வலம் செல்ல முயன்ற 1,000 தொழிலாளர்கள் கைது
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின்நிலையத் தொழிலாளர்கள் 1,000 பேர் ஊர்வலம் செல்ல முயன்றதற்காக சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
ஊதிய விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்றவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நெய்வேலி அனல் மின்நிலையத் தொழிலாளர்கள்.
வேலைநிறுத்தத்தின் 6ஆவது நாளான சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,000 தொழிலாளர்கள்,ஊர்வலம் செல்ல முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டனர்.
Story first published: Saturday, May 26, 2001, 5:30 [IST]