ஜாக்பாட் வென்ற அமெரிக்க தமிழர்
நியூயார்க்:
நியூயார்க் டிவி ஒன்று நடத்திய போட்டியில் 75,000 டாலர் பரிசுத் தொகையையும்,அமெரிக்காவின் லேட்டஸ்ட் "கோர்வர்ட்" காரையும் ஜாக்பாட் பரிசாகப் பெற்றார்அமெரிக்கத் தமிழர் ஒருவர்.
சேதுராமன் பாபு ஸ்ரீனிவாசன் என்ற அந்தத் தமிழரிடம், 50 கேள்விகள் கேட்டதாம்போட்டியை நடத்திய டிவி நிறுவனம். இந்த 50 கேள்விகளுக்கும் பதிலளித்தால்தான்அடுத்த ரவுண்டுக்கே போக முடியுமாம்.
அடுத்த ரவுண்டுக்குப் போன ஸ்ரீனிவாசனிடம் 35 கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிஏகப்பட்ட கேள்விகளுக்கும் பதில் சொன்ன பிறகுதான் ஜாக்பாட் தொகையைவென்றிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
தான் வென்ற இந்த ஜாக்பாட் தொகையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றுஅவர் இன்னும் முடிவு செய்யவில்லையாம். "பாதிக்கு மேல் எப்படியும்வரிப்பணமாகப் போய்விடும்" என்று லேசாக அலுத்துக் கொள்கிறார் ஸ்ரீனிவாசன்.
இவரையும் சேர்த்து இதுவரை 14 பேர் ஜாக்பாட் வென்றுள்ளார்கள் என்று போட்டியைநடத்திய டிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
நியூயார்க்கிலேயே பிறந்து வளர்ந்த ஸ்ரீனிவாசனுக்கு 33 வயதாம். இவர்அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தவர். தற்போது ஒருபகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கென்று தனியாக ஒரு வெப்-சைட்டும் உள்ளது. www.babu.cc என்ற முகவரிக்குச்சென்றால், இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications