பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் சாவு
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டு பால்கனி சுவர் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில்மாமியாரும், மருமகளும் இறந்தனர்.
தண்டையார்பேட்டை நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய தாயார் மீனாட்சி (55),மனைவி மஞ்சுளா (29).
சனிக்கிழமை மாலை வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார் மஞ்சுளா. அவருடைய மாமியார் மீனாட்சி வாசல்திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது, திடீரென வீட்டின் பால்கனி சுவர் இடிந்து, அவர்கள் இருவர் மீதும் விழுந்தது. இடிபாடுகளுக்கிடையேஅவர்களுடைய அலறலைக் கேட்ட பக்கத்து வீட்டினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே மீனாட்சி இறந்தார். தண்டையார்பேட்டை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, பின்னர் இறந்தார்.
காசிமேடு போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications