ராம ஜென்ம பூமி இயக்க தலைவர் குண்டு வீச்சில் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

அயோத்யா:

ராம் ஜென்ம பூமி நியாஸ் சமிதியின் துணைத் தலைவர் மஹாந்த் நிரித்யா கோபால் தாஸ் திங்கள்கிழமை அதிகாலைநடந்த வெடி குண்டு வீச்சு தாக்குதலில் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து பைசலாபாத் போலீஸ் கமிஷனர் அனில் குமார் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், மஹாந்த்தும்அவரது சீடர்களும் திங்கள்கிழமை அதிகாலை சரயூ நதிக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீதுஅடையாளம் தெரியாத கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இந்த குண்டு வீச்சில் காயமடைந்த மஹாந்தும் அவரது சீடர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இடத்தை சுற்றி வளைத்தனர் என்றார்.

சட்டம் ஒழூங்கு பிரிவின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பண்டிட் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,மஹாந்த் மீதும், அவரது சீடர்களுக்கும் கால்களில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது என்றார். மஹாந்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

உத்திரபிரதேச மாநில அரசு சமீபத்தில் அறிவித்த புதிய செயல்திட்டத்தின் படி மஹாந்துக்கு அளிக்கப்பட்டு வந்தசிறப்பு காவல் சில தினங்களுக்கு முன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சென்ற ஆண்டு மே மாதம் 15ம் தேதி மஹாந்த் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்துசி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. ஆனால் அந்த வழக்கில் இது வரை எந்த விதமான முன்னேற்றமும்ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+