கொழும்பில் அதிரடி தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்
கொழும்பு:
கொழும்பு நகரில் அதிரடி தாக்குதல் நடத்துவதற்காக புலிகள் அங்கு ஊடுருவியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமரசபேச்சுவார்த்தையை தொடங்கி வைப்பதற்காக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் ஈடுபட்டுள்ளார்.
தங்கள் மீதான தடையை நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று புலிகள் கூறியுள்ளனர்.
ஆனால் புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்க மாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகஅறிவித்துள்ளது.
இதனால் இருதரப்பினருக்கும் பேச்சுவார்த்தை ஏற்படுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.அதனால் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொழும்பில் அதிரடித் தாக்குதல்நடத்துவதற்காக கரும்புலிகள் ஊடுருவியுள்ளனர். இவர்கள் வன்னி காட்டுப்பகுதியில் இருந்து கொழும்புநகருக்குள் ஊடுருவியுள்ளனர். கொழும்பில் நுழைவதற்காக இன்னும் பல புலிகள் தங்களைத் தயார் படுத்திவருகிறார்கள்.
கடந்த வாரம் புலிகள் தலைவர் பிரபாகரன், தங்கள் இயக்கத்தில் உள்ள முக்கியத் தலைவர்களுடன் இது குறித்துபேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.