எல்லைப் பிரச்சனை: இந்தியா- வங்கதேசம் பேச்சுவார்த்தை
டாக்கா:
எல்லைப் பகுதியில் நிலவிவரும் பிரச்சனை குறித்தான விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்திய - வங்கதேசம்இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் நடக்கவுள்ளது.
இது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளர் சையத் முவாஜீம் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை ஜுன் மாதம் முதல் வாரம் டெல்லியில்நடைபெறும். இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை அடுத்த மாதம் மத்தியில் டாக்காவில் நடைபெறும்.
இந்த பேச்சுவார்த்தை கூடுதல் செயலாளர்கள் மட்டத்தில் நடைபெறும் என்றார்.
கடந்த மாதம் இந்திய - வங்கதேசம் இடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்சனையைதீர்ப்பதற்காக இரு நாட்டு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த சண்டையில் இந்திய, புறக்காவல் படையைச் சேர்ந்த 19 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்திற்கான இந்திய தூதர் மணிலால் திரிபாதி, வங்க தேச வெளியுறவுத்துறை செயலாளர் அலியைஞாயிற்றுக்கிழமை டெல்லியில் சந்தித்து டெல்லியில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.