போலீஸ் துறையில் தொடர்கிறது "பந்தாடும்" படலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றவுடன் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவதுஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக வி. சந்திரகிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்) ஐ.ஜி.யாக இருந்த சி. பாலசுப்ரமணியன், சென்னைசமூகநீதிப் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இங்கு ஐ.ஜி.யாக இருந்த கே.ஆர். ஷியாம் சுந்தர், சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்)ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிபு எஸ்.பி.யாக இருந்தவர் கே. சண்முகவேல். இவர் சேலம் மாநகர துணைஆணையராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications