For Daily Alerts
Just In
ப்ளஸ் டூ: 83.29 சதவீதம் பேர் தேர்ச்சி
சென்னை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 83.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகமாநில அரசு தேர்வு இயக்குநர் பரமசிவன் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வெளியானது.
தேர்வு முடிவுகள் குறித்து அரசு தேர்வு இயக்குநர் பரமசிவன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4, 63, 955 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் பள்ளிகள் மூலம் 3லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
இந்த முறை 86.21 சதவீதம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 80.36 சதவீதம் ஆண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் இந்த முறையும் ஆண்களை விட பெண்களே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்பரமசிவம்.
Comments
Story first published: Monday, May 28, 2001, 5:30 [IST]