ரயில் டிராலி தடம்புரண்டதில் 11 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வாணியம்பாடி அருகே சனிக்கிழமை ஒரு ரயில் டிராலி தடம்புரண்டதில் ரயில்வே போலீஸ் எஸ்.பி. உள்பட 11 பேர்காயமடைந்தனர்.
ரயில் கொள்ளைகள் நடந்ததையடுத்து, வேலூர் மாவட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
ரயில்வே போலீஸ் எஸ்.பி. அபய்குமார் சிங் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப்படை அலுவலர்கள் ஒருடிராலியில் அமர்ந்து ரயில் பாதையைக் கண்காணித்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமையும் இவ்வாறு ராயில் பாதையைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12.30மணிக்கு, தண்டவாளத்தில் கிடந்த ஒரு இரும்பு போல்ட் மீது டிராலி ஏறி, தடம்புரண்டது.
இதில் அபய்குமார் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications