தற்கொலைப் படையைச் சேர்ந்த விடுதலைப்புலி கைது
கொழும்பு:
முக்கிய அரசியல் தலைவரை குறிவைத்து கொல்லவந்த விடுதலைப்புலிகளின்தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்கள் மீதுள்ள தடையை இலங்கை அரசு நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என இலங்கை அரசுக்கு விடுதலை புலிகள் திங்கள்கிழமைஎச்சரிக்கை விடுத்தனர்.
அவர்கள் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களியே விடுதலை புலிகளின்தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தது இலங்கையில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கொல்வதற்காக அந்த விடுதலைப்புலி வந்ததாகபோலீசார் தெரிவித்தனர்.
மேலும், மொபைல் போனுடனும்,கொழும்பு நகர வரைபடத்துடனும் சுற்றி வந்தவவுனியாவைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் கொழும்புவில் தாக்குதல் நடத்துவதற்காக வந்துள்ளனர்எனப் போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.