புயல் வலுவிழந்தது: குஜராத் தப்பியது
காந்திநகர்:
அரபிக்கடலில் மையம் கொண்டு குஜராத்தை அச்சுறுத்தி வந்த புயல் வலுவிழந்துகுறைந்த காற்றழுத்தமண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம்தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறுகையில், தற்போதுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள இப்புயல், போர்பந்தருக்குதென்மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும்வலுவிழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் கட்ச் (புஜ்), போர்பந்தர், ஜுனாகாத் மாவட்டங்களிலும், டையுயூனியன் பிரதேசத்திலும் புயல் அபாயம் குறைந்துவிட்டது. ஆனாலும், அகமதாபாத்வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் புயல் அபாய எச்சரிக்கைக் கொடி எண் 5ஏற்றப்பட்டுள்ளது.
முதலில் இந்த புயல் குஜராத்தின் தென் பகுதியை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் புயல் நகர, நகர அது வலுவிழந்தது.
புயல் அச்சுறுத்தல் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த 25,000 மக்களைமுன்னெச்செரிக்கை நடவடிக்கையாகபாதுகாப்பான இடத்தில் குஜராத் அரசு தங்கவைத்துள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எந்த விதமான உயிர்ச்சேதமோபொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications