த.மா.கா. ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.
தமிழ் மாநில காங்கிரசலிருந்து பிரிந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமிழ் மாநில ஜனநாயக பேரவைஎன்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இந்த கட்சிதி.மு.க.ஆதரவுடன் போட்டியிட்டது.
இந்தக் கட்சியின் சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிடடு வெற்றி பெற்றவர் ரங்கநாதன்.
பெரம்பூர் அருகே ஜவஹர் நகரில் எம்.எல்.ஏ ரங்கநாதனுக்குச் சொந்தமான சென்னை ராயல் கிளப் என்றபொழுதுபோக்கு கிளப் உள்ளது. அங்கு சூதாட்ட கிளப், மற்றும் பாரும் உள்ளது
அந்த இடத்தில் சோதனை நடத்திய போலீசார் கிளப்பின் துணை செயலாளர் தாமஸ் செல்வராஜ் உள்ளிட்ட 12பேரை கைது செய்துள்ளனர்.
கிளப்பின் தலைவர் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மற்றும் 12 பேர் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
போலீஸாரின் நடவடிக்கை குறித்து அறிந்த ரங்கநாதன் எழும்பூர் 5-வது மெட்ரோபாலிடன் கோர்ட்டில் ஆஜராகிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு மனுச் செய்தார். மனுவை ஏற்ற நீதிபதி ரங்கநாதனை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 12 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர். கீழ்ப்பாக்கத்தில் இருக்கும்ரத்தினவேல் என்பவர் தன்னை கொலை செய்ய ரங்கநாதன் முயற்சிப்பதாக கொடுத்த வழக்கின் பேரில் இவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் தேர்தல் நிதி வசூலிப்பதற்காக ரத்தினத்தை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ரத்தினவேல் கூறிய புகாரின் பேரில் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்என்றனர். ரங்கநாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் ரங்கநாதனை 14வது குற்றவியல் மாஜிஸ்திரேட முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் பேரில் ரங்கநாதன் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.