For Daily Alerts
Just In
நெல்லைக்கு 1ம் தேதி சிறப்பு ரயில்
சென்னை:
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஜூன் 1ம் தேதி சிறப்பு ரயில் விடப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன. இதையடுத்துரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஜூன் 1ம் தேதி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் கூடுதலாக ஒரு ரயில் விடப்படவுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து 1ம் தேதி இரவு 11 மணிக்கு இந்த சிறப்பு ரயில் கிளம்பும். மறுநாள் பிற்பகல் 12.15மணிக்கு நெல்லையை அடையும்.
மறுமார்க்கத்தில், 3ம் தேதி இரவு 8 மணிக்கு நெல்லையில் கிளம்பி 4ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையைவந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சிவழியாக நெல்லைக்குச் செல்லும்.
Comments
Story first published: Wednesday, May 30, 2001, 5:30 [IST]