ஓய்வுக்குப் பின் டெல்லி திரும்பினார் வாஜ்பாய்
சிம்லா (ஹிமாச்சல பிரதேசம்):
ஹிமாச்சலப் பிரதேசம் குலுமனாலியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி கடந்த 1 வார காலமாக ஓய்வெடுத்து வந்தபிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை டெல்லி திரும்பினார்.
பிரதமர் வாஜ்பாய் விமானம் மூலம் சண்டிகார் வழியே டெல்லி திரும்பினார்.
சண்டிகார் விமான நிலையத்தில் முதல்வர் பிரேம் குமார் தோமால் பிரதமர் வாஜ்பாயை டெல்லிக்கு வழியனுப்பிவைத்தார்.
குலுமனாலியில் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்த போது, ரியோரிச் ஆர்ட் காலரியை நேரில் சென்று பார்த்தார்.மேலும் பார்வையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தார்.
ரியோரிச் ஆர்ட் காலரியை புதுப்பிப்பதற்கும், ஊர்ஸ்வதி ஹிமாலயன் ஆராய்ச்சி மையத்துக்கும் மத்திய அரசு ரூ 1கோடி நிதியுதவி அளிக்கும் என்று தனது குலுமனாலி பயணத்தின் போது வாஜ்பாய் கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் ஜூன் மாதம் 5 ம் தேதி தனது மூட்டு வலி அறுவை சிகிச்சைக்காக மும்பை செல்கிறார் பிரதமர் வாஜ்பாய்.
யு.என்.ஐ.