அ.தி.மு.கவின் பழிவாங்கும் போக்கு .. கருணாநிதி புகார்
சென்னை:
அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் போக்கு குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் 4ம் தேதி கூடும் தி.மு.க பொதுக்குழுவில் பேசப்படும் என்று முன்னாள் முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநநிதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.கவினர் மீதுஅ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அ.தி.மு.க அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கு குறித்து 4-ம் தேதி கூடும் பொதுக்குழுவில் பேசப்படும்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும், அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் என் மீது வழக்குத் தொடரமுயற்சித்தனர். ஆனால் அது பலனற்றுப் போனது. இப்போதும் சர்க்காரியா கமிஷன் முடிவுப்படி என் மீதுநடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுவும் பலனற்றுத்தான் போகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications