தேர்வில் வினாத்தாளுக்கு பதில் விடைத்தாள்?
ஈரோடு:
பெரியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரி முதலாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்குவினாத்தாளுக்குப் பதிலாக விடைத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெரியார் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை பொறியியல்பட்டப்படிப்பிற்கான தேர்வு நடந்தது.
இந்த தேர்வில், முதலாமாண்டு முதல் செமஸ்டரில் தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர்.மாலையில் நடந்த இந்த அரியர்ஸ் தேர்வில் சில மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
ஆசிரியர்கள் இவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்குவதற்கு பதிலாக விடைத் தாள்களை வழங்கினர். இதனைக்கண்ட மாணவர்கள், வினாவைக் காணாமல், விடைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இவர்கள் விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது பற்றி தெரிவித்த பின்னர், ஆசிரியர்கள் அவசரமாக அவற்றைத்திரும்ப பெற்றுக் கொண்டு வினாத்தாள்களை வழங்கினர்.