கோவையில் நூற்பாலை உதிரிபாகங்கள் கண்காட்சி
கோவை:
நூற்பாலை உதிரிபாகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் நடத்தப்படும் டெக்ஸ்பேர்ஸ் 2001 என்ற கண்காட்சிகோவையில் நடக்கிறது.
கோவையில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி அகில இந்திய அளவிலான டெக்ஸ்பேர்ஸ் என்ற கண்காட்சி நடக்கிறது.
இந்தக் கண்காட்சியில் நூற்பாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் இடம் பெறும். இது குறித்துதென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் விஜய் வெங்கிடசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் நூற்பாலைகளின் உதிபாகங்கள் கண்காட்சி முதல் முறையாக கோயம்புத்தூரில் நடக்கிறது. இந்தக்கண்காட்சியில், உலக அளவிலான நூல் மில்களின் இயந்திரப் பாகங்கள் இடம் பெறும். இந்தியாவில் ஆண்டுக்குஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. தென்னிந்திய அளவில் மட்டும் இதன் மதிப்பு 500 கோடி ரூபாய்ஆகும்.
வெளிநாடுகளிலிருந்து 12 சதவீதம் இவ்வித உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. மின்சேமிப்புசாதனங்கள் உள்பட அனைத்துப் பொருட்களும் இக் கண்காட்சியில் இடம் பெறும். சுமார் 200 ஸ்டால்கள் இதில்இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications