இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
சென்னை:
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்பதற்காக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்றுமீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் சட்டசபையில் தெரிவித்தார்.
புதன்கிழமை சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏ.குமாரதாஸ் மீனவர்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார்.அவர் கூறுகையில், தற்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றால் அவர்கள் உயிருடன் வீடுதிரும்புவார்களா என்ற அச்சப்பட வேண்டியிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் இலங்கைச் சிறையில் கடந்த 1 மாதத்துக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மீட்க தேவையான முயற்சிகளில் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், இலங்கை சிறையில் வாடும்தமிழக மீனவர்களை மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
முதல்வரின் ஆலோசனைப்படி, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications