திமுக, அதிமுகவுக்கு மாற்றாக செயல்படுவோம்: வைகோ
தஞ்சாவூர்:
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் செயல்படுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோதெரிவித்தார்.
தஞ்சையில் 29 மற்றும் 30 தேதிகளில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகுவைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுகவோ ஊழலின் ஊற்றாகத் திகழ்கிறது. திமுகவோ வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் சக்தியாக மாறி விட்டது.
இதனால் தமிழக மக்களின் வாழ்வு செழிக்கவும், மகிழ்வும், அச்சமுமற்ற அமைதி உருவாகவும் மதிமுக பாடுபடும்.
அதாவது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் செயல்படுவோம் என பொதுக்குழுக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் அதிமுக அரசு, திமுகவினரைக் கைது செய்து வருவது பழிவாங்கும் நடவடிக்கையா என்றுகூற முடியாது. ஏனெனில் இந்த வழக்குகளில் முழு உண்மை தெரியாமல் நாங்கள் எதுவும் கருத்து கூற முடியாது.
நான் மத்திய அமைச்சரவையில் சேரப்போவதாக பல பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தது. 1998 ம்ஆண்டு வாஜ்பாய் அழைத்தபோதே நான் பதவியில் சேர முடியாது என மறுத்தேன். அந்த நிலையில் மாற்றம்இல்லை.
ஜூன் 2 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியில் இணைந்துள்ள இளைஞர்களுக்காக கருத்தரங்கம், பயிற்சி பாசறைகள் ஜூலை 31 ம் தேதிவரை நடைபெறும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications