For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மீது சுவாமி வழக்கு .. விசாரணை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிப்பதை தடை செய்யக் கோரிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிதொடுத்துள்ள வழக்கின் அடுத்த கட்ட விசாரணை கோடை விடுமுறைக்குப் பின் நடத்தப்படும் என சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிப்பது சட்டவிரோதம், எனவே அவர் முதல்வர் பதவியில் நீடிக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரி சுப்ரமணிய சுவாமி சார்பில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.

மனுவில், எம்.எல்.ஏ. ஆகக் கூடாத தகுதியில்லாத ஜெயலலிதா முதல்வர் பதவியை ஏற்றிருப்பது சட்டவிரோதம்.எனவே அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கோர்ட் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள்,சுப்ரமணிய சுவாமி தற்போது டெல்லியில் இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை என்றும், வேறொருநாளில் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரினர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஜெகதீசன், நாகப்பன் ஆகியோர், கோடை விடுமுறைக்குப் பின் இந்தவழக்கின் விசாரணை தொடரும் என்று உத்தரவிட்டார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X