இந்திய ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு
கோவை:
கடந்த 5 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 12.5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது என மத்திய அரசின் ஜவுளித்தொழில்நுட்ப செயலர் வெங்கடசாமி தெரிவித்தார்.
வெங்கடசாமி கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் வெங்கடாசலம் அப்பேரல் டெக்னாலஜி என்ற புதியபட்ட வகுப்பைத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த பட்ட வகுப்பில் புதிய ஆடை வடிவமைப்புமற்றும் அதனை உருவாக்கும் முறைகள் குறித்த பாடம் இடம் பெறும்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளிப் பொருட்களின் அளவு அதிகரித்து வருகிறது. இது1996ம் ஆண்டு 16 ஆயிரத்து 170 கோடியாக இருந்தது. தற்போது 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுஆண்டுக்கு 12.5 சதவீத வளர்ச்சியாகும்.
திருப்பூரிலிருந்து இந்திய ஏற்றுமதியில் 14 சதவீதம் ஜவுளி ஏற்றுமதியாகிறது. பன்னாட்டு நிறுவனங்கள்இந்தியாவிற்கு வரும்போது இங்கு அவை புதிய போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,இவற்றைச் சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications