வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து விவரம் சேகரிப்பு
சேலம்:
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பல அமைச்சர்கள் மற்றும் திமுகவினரின் சொத்து விவரம் சிஐடிபோலீஸாரால் ஆதாரபூர்வமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றவுடன் திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள், அளவுக்குஅதிகமாக சொத்து சேர்த்தவர்கள், பினாமிகள் பெயரில் சொத்துக்களை பாதுகாத்து வைத்துள்ளவர்கள் பற்றியதகவல்களைத் திரட்ட சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் சிஐடி போலீஸார் திமுக விஐபிக்களின் சொத்து விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.ஆதாரபூர்வமான வகையில் சிஐடி போலீஸாரால் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
கடந்த 1989 ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவை தாக்க முயன்ற காரணத்தாலும், ஜெயலலிதாவை கடுமையாகவிமர்சித்து வந்ததாலும் பரிதி இளம்வழுதியை கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த பட்டியலில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட மேலும் பலர் உள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார்மட்டுமின்றி வீரபாண்டி ஆறுமுகத்தின் முழு சொத்து விவரம், பினாமிகள் விவரம், சொத்துக்களை பராமரிப்பதுயார்? எந்த வகையில் பணம் செலவழிக்கப்படுகிறது? என்பது உள்பட அவரது அனைத்து நடவடிக்கைகளையும்கவனித்து வருகிறார்கள்.
இதுதவிர ஏற்காட்டில் சொத்து வாங்கிக் குவித்தது தொடர்பாகவும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விட அதிக அளவில் சொத்துசேர்த்த திமுகவினரின் விபரம் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.
திமுகவினரின் சொத்து விவரம் பற்றி சிறிது தெரிய வந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் சொத்துக்கள் பற்றி முழுவிவரமும் சேகரிக்கப்படுவதால் திமுக பிரமுகர்கள் கிலியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications