For Daily Alerts
Just In
சென்னை-கொல்லம் ரயில் தடம்புரண்டது
போத்தனூர்:
சென்னையிலிருந்து சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் கோவை அருகே தடம் புரண்டது. ரயில் மெதுவாகச் சென்றதால்,பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வியாழக்கிழமை சென்னையிலிருந்து கோவை வழியாக கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
இது கோவை அருகே உள்ள போத்தனூர் ரயில் நிலையத்திற்கு மெதுவாகச் சென்றது. அப்போதுஎதிர்பாராதவிதமாக ரயில் இன்ஜினுக்கு அருகில் இருந்த ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.
ரயில் மெதுவாகச் சென்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ரயில் பயணிகள் உயிர் தப்பினர். சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு இந்த ரயில் பெட்டிகள் சரி செய்யப்பட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது.
Comments
Story first published: Friday, June 1, 2001, 5:30 [IST]