நகை தகராறில் மனைவி கொலை ... கணவன் கைது
கோவை:
கம்மலால் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்தவரைப் போலீசார் கைதுசெய்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஊத்தாங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தன் (46). இவர் கட்டடத்தொழிலாளியாக கோவையில் வேலை பார்த்து வந்தார். தன் இரண்டாவது மனைவிமொட்டையம்மாள் (40) மற்றும் முதல் மனைவியின் மகள் குப்பம்மாள் (20)ஆகியோருடன் இவர் கோவையில் தங்கியிருந்தார்.
ஒரு ஜோடிக் கம்மலை கோவிந்தன் வாங்கி வந்துள்ளார். அதனை மொட்டையம்மாள்வாங்கிப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட கோவிந்தனின் மகள் குப்பம்மாள்,தனக்கு வேண்டும் என அடம் பிடித்துள்ளார். எனவே, அதை மொட்டையம்மாளிடம்இருந்து பிடிங்கி, தன் மகளிடம் கோவிந்தன் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மொட்டையம்மாள், கோபித்துக் கொண்டு வேறு இடத்திற்குச்சென்றுள்ளார். அங்கு அவரைச் சமாதானப்படுத்த கோவிந்தன் முயன்றுள்ளார்.ஆனால், மொட்டையம்மாள் சமாதானம் அடையமால், தகராறு செய்துள்ளார்.
இதில் மொட்டையம்மாளைக் கீழே தள்ளி விட்டார் கோவிந்தன். தலையில் பலத்தகாயமடைந்த மொட்டையம்மாள் அதே இடத்தில் இறந்து போனார். இறந்து போனதைஅறிந்த கோவிந்தன், பக்கத்தில் இருந்த பள்ளி அருகே பிணத்தைப் போட்டு விட்டுத்தலைமறைவானார்.
பிணத்தைக் கைப்பற்றிய போலீசார், கோவிந்தனைத் தேடிச் சென்று கைது செய்தனர்.மேலும், அவர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.