For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. முதல்வரானதை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. டான்சி நிலப்பேர ஊழல் தொடர்பானஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும சசி எண்டர்பிரைசஸ் வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு 5 ஆண்டுகள்சிறைத்தண்டனை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள்தேர்தலில் போட்டியிட முடியாது. அதன்படி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டைதொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெயலலிதா தமிழகமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநலன் கருதி வக்கீல்கள் மனோகர் லால் சர்மா மற்றும் கபூர் ஆகியோர் டெல்லிசுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுஜனநாயக விரோத செயலாகும்.

ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்கும்படி, தமிழக கவர்னர் பாத்திமா பீவி கூறியது தவறானமுன்னுதாரணமாகும்.

அதனால் ஜெயலலிதா தமிழக முதல்வரானதை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களது மனுவில் கூறியுள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X