தமிழ் தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய ஜெ. கோரிக்கை
டெல்லி:
தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் தேச எழுச்சிப் படை, அல்-உம்மா ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என மத்திய அரசிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயையும் உள்துறை அமைச்சர் அத்வானியையும் அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப்பேசினார். இரண்டாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமரை ஜெயலலிதா சந்திப்பதுஇதுவே முதல்முறையாகும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்என பிரதமரிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பார் எனத் தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத்தெரிவிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
அத்வானியிடம் பேசிய ஜெயலலிதா மதவாத, இனவாத அமைப்புகளைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.சந்தன வீரப்பனுடன் தொடர்புடைய தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் தேசிய எழுச்சிப் படைஆகியவற்றையும் அல்-உம்மா அமைப்பையும் தடை செய்ய அவர் கோரிக்கை வைத்தார்.
தான் முதல்வராகப் பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், விசாரணைஆகியவை குறித்துக் நிருபர்கள் கேட்டபோது, நீதிமன்றத்தில் உள்ள ஒரு விவகாரம் குறித்து கருத்துக் கூறவிரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.