வட தமிழகத்தில் அடை மழை
சென்னை:
சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில்பலத்த மழையும், காற்றும் அடித்து வருகிறது.
சென்னை நகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால், பள்ளி செல்லும்மாணவி, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மிலாடி நிபி காரணமாக அலுவலகங்கள்விடுறை என்பதால் அலுவலகங்களுக்குச் செல்வோர் தப்பினர்.
நடந்து செல்வோர் மட்டுமல்லாது பஸ்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான சிட்டி பஸ்கள்ஓட்டை, உடைசலாக இருப்பதால் பஸ்களுக்குள் குற்றால நீர்வீழ்ச்சி போல மழைத் தண்ணீர் ஒழுகுகிறது.
இதனால் பஸ்சுக்குள் இருந்தாலும், வெளியில் மழையில் நினைந்து கொண்டு செல்வது போன்ற உணர்வேபயணிகளுக்கு ஏற்படுகிறது.
சென்னை மட்டுமல்லாது, வட மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழைமேலும் 2 நிாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications