கவர்னர் விவகாரம்: கருணாநிதி மீது லத்தீப் குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை கருணாநிதிஅரசியலாக்குகிறார் என இந்திய தேசிய லீக்கின் (ஐ.என்.எல்.)பொதுச் செயலாளரும் அக்கட்சியின் தமிழ்நாடுதலைவருமான எம்.ஏ. லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய லீக்கின் மாநில பொதுககுழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு லத்தீப் பேட்டியளித்தார். பேட்டியின்போது அவர் கூறுகையில், கருணாநிதியும், தமிழக பா.ஜ.கவும் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என கூறுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.
தி.மு.கவும் பா.ஜ.வும் தமிழக ஆளுனரை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதை எதிர்த்து இந்தியலீக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாத்திமாபீவி அரசியல் சட்டப்படி தனக்கு உள்ள அதிகாரத்தின்படியேசெயல்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சரிதான். அதை சட்டரீதியாக எதிர்க்க முடியாது
தி.மு.கவால் அமைக்கப்பட்ட உருது அகாடமியும், வாக்ஃப் போர்டும் ஒழுங்கற்ற முறையில் செயல்படுவதால்நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவை சீரமைக்கப்பட வேண்டும். அதேபோல் தமிழக ஹஜ் கமிட்டியும் மாநிலசிறுபான்மை கமிஷனும் சீரமைக்கப்பட வேண்டும்.
கரும்பு விவாசாயிகள் நீண்ட காலமாக டன் ஒன்று ரூ 1,000 கொடுக்கப்பட வேண்டும் என கேட்டு வருகிறார்கள்அதை அரசு ஏற்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.