இன்னும் 10 நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்குத் தேவையான முயற்சிகள் நடந்துவருகிறது.
கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி தொடங்கி எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை ஏப்ரல் 9 ம் தேதி முடிவடைந்தது.
தமிழகத்தில் 7 லட்சத்து 73 ஆயிரத்து 366 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் தனியாக தேர்வுஎழுதியவர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 132 பேர்.
மாணவ-மாணவியரின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. தற்போது மார்க்குகள் பாடம்வாரியாக கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. தேர்வு பணித்துறை ஊழியர்கள் இந்த வேலையில்முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 16 ம் தேதி வெளியிடப்பட்டது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் கூடுதலாகத் தேர்வு எழுதியுள்ளனர்.ஜூன் மாதம் 16 ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.