மனைவியின் பிரிவால் தூக்கில் தொங்கிய பேராசிரியர்
சென்னை:
பிரிந்திருந்த மனைவி புது வீடு திறப்பு விழாவுக்கு வராததால், துக்கமடைந்த கணவன் புதிய வீட்டிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (30). இவரது மனைவி ஸ்ரீதேவி (28).நரசிம்மன் வள்ளியம்மை என்ஜீனியரிங் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வந்தார்.
நரசிம்மனுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில்நரசிம்மன் புது வீடு கட்டினார். இந்த வீட்டின் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புது வீடு திறப்பு விழாவுக்குமனைவி உள்பட உறவினர்களை அழைத்திருந்தார். ஆனால் ஸ்ரீதேவி கிரகப்பிரவேசத்திற்கு வரவில்லை.
இதனால், வீடு திறப்பு விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் மனைவி ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளனர்.அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நரசிம்மன் தவித்தார்.
தான் அழைப்பு அனுப்பியும்கூட மனைவி வரவில்லை என்பதால் அவர் மனவருத்தம் அடைந்தார். இதனால் புதுவீடு திறப்பு விழா அன்றே வீட்டிற்குள் சென்று தூக்குப் போட்டுக் கொண்டார். மயங்கிய நிலையில் அவரைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.