ஆந்திராவிலிருந்து தமிழக மீனவர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 60 பேர் பணயத் தொகை கொடுக்கப்பட்டுமீட்கப்பட்டனர்.

கடந்த மே மாதம் 30, 31 ம் தேதிகளிலும், ஜூன் மாதம் 1 ம் தேதியும் காசிமேடு பகுதியிலிருந்து 10விசைப்படகுகளில் 60 மீனவர்கள் சென்றனர்.

இவர்களது விசைப்படகு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள கடல் அருகே சென்று கொண்டிருந்த போதுஆந்திர கடற்கொள்ளைக்காரர்கள் அவர்களைத் தாக்கினர்.

நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 6 படகுகளில் 30 க்கும் மேற்பட்ட கடற்கொள்ளையர்கள்தாக்குதல் நடத்தினர்.

தமிழக மீனவர்களிடம் இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை ஆந்திரகடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு சென்றனர்.

பின்னர் மீனவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் ஊட்டுக்கூர் பெத்தபாளையம் கிராமத்துக்குக் கடத்திச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 3 நாட்கள் சிறைவைக்கப்பட்டனர்.

இந்தத் தகவல்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் சங்கத்துக்குத் தெரிய வந்தது.

பின்னர் மீனவர் சங்க உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்று கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினர். அவர்கள் ரூ 2 லட்சம் பணயத்தொகை கொடுத்தால்தான் மீனவர்களை விடுதலை செய்வோம் என்றனர்.

இதையடுத்து ரூ 50, 000 பணயத்தொகை கொடுத்து மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+