ஆந்திராவிலிருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
சென்னை:
ஆந்திர கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 60 பேர் பணயத் தொகை கொடுக்கப்பட்டுமீட்கப்பட்டனர்.
கடந்த மே மாதம் 30, 31 ம் தேதிகளிலும், ஜூன் மாதம் 1 ம் தேதியும் காசிமேடு பகுதியிலிருந்து 10விசைப்படகுகளில் 60 மீனவர்கள் சென்றனர்.
இவர்களது விசைப்படகு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள கடல் அருகே சென்று கொண்டிருந்த போதுஆந்திர கடற்கொள்ளைக்காரர்கள் அவர்களைத் தாக்கினர்.
நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 6 படகுகளில் 30 க்கும் மேற்பட்ட கடற்கொள்ளையர்கள்தாக்குதல் நடத்தினர்.
தமிழக மீனவர்களிடம் இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை ஆந்திரகடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு சென்றனர்.
பின்னர் மீனவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் ஊட்டுக்கூர் பெத்தபாளையம் கிராமத்துக்குக் கடத்திச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 3 நாட்கள் சிறைவைக்கப்பட்டனர்.
இந்தத் தகவல்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் சங்கத்துக்குத் தெரிய வந்தது.
பின்னர் மீனவர் சங்க உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்று கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினர். அவர்கள் ரூ 2 லட்சம் பணயத்தொகை கொடுத்தால்தான் மீனவர்களை விடுதலை செய்வோம் என்றனர்.
இதையடுத்து ரூ 50, 000 பணயத்தொகை கொடுத்து மீனவர்கள் மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications