ஆந்திராவிலிருந்து தமிழக மீனவர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 60 பேர் பணயத் தொகை கொடுக்கப்பட்டுமீட்கப்பட்டனர்.

கடந்த மே மாதம் 30, 31 ம் தேதிகளிலும், ஜூன் மாதம் 1 ம் தேதியும் காசிமேடு பகுதியிலிருந்து 10விசைப்படகுகளில் 60 மீனவர்கள் சென்றனர்.

இவர்களது விசைப்படகு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள கடல் அருகே சென்று கொண்டிருந்த போதுஆந்திர கடற்கொள்ளைக்காரர்கள் அவர்களைத் தாக்கினர்.

நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 6 படகுகளில் 30 க்கும் மேற்பட்ட கடற்கொள்ளையர்கள்தாக்குதல் நடத்தினர்.

தமிழக மீனவர்களிடம் இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை ஆந்திரகடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு சென்றனர்.

பின்னர் மீனவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் ஊட்டுக்கூர் பெத்தபாளையம் கிராமத்துக்குக் கடத்திச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 3 நாட்கள் சிறைவைக்கப்பட்டனர்.

இந்தத் தகவல்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் சங்கத்துக்குத் தெரிய வந்தது.

பின்னர் மீனவர் சங்க உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்று கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினர். அவர்கள் ரூ 2 லட்சம் பணயத்தொகை கொடுத்தால்தான் மீனவர்களை விடுதலை செய்வோம் என்றனர்.

இதையடுத்து ரூ 50, 000 பணயத்தொகை கொடுத்து மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+