For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாம், மேகாலயாவில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கவுஹாத்தி:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் 3.9 என்ற ரிக்டர் அளவில்வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலுள்ள பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர் சாகு கூறுகையில்,மேகாலயாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்துதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

மேகாலயாவில் ஏற்பட்டது போல் அசாமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் தலைநகர் கவுஹாத்தியில் வீடுகளில்இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி ஓடினர். அவர்களிடம் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பபயம் குடிகொண்டிருந்தது.

கவுஹாத்தியில் இன்ஜினியராகப் பணிபுரியம் அனில் நாத் கூறுகையில், நிலநடுக்கம் வியாழக்கிழமை பிற்பகல்ஏற்பட்டது. எங்களுக்கு உடனே குஜராத் பூகம்பம்தான் நினைவுக்கு வந்தது. உடனடியாக அலுவலகத்தை விட்டுவெளியேறி ஓடினோம் என்று பீதியுடன் கூறினார்.

முன்னதாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான 7 மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும்அபாயம் உள்ளது. இந்த மாநிலங்களில் 1897 ம் ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் 1,600 பேர்கொல்லப்பட்டனர்.

1950 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி அசாமில் 8.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதே போல் கடந்த வருடம் ஜனவரி 26 ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 25, 000 க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் நகர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கட்ச், அகமதாபாத்உள்பட பல மாவட்டங்கள் பூகம்பத்தால் தரைமட்டமானது நினைவிருக்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X