வாஜ்பாய் விரைவில் குணமடைய ஜெ.வாழ்த்து
சென்னை:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாய்விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக, வெற்றிகரமாக நடந்து முடிந்தது மிகவும் சந்தோஷமானவிஷயமாகும். பிரதமர் விரைவில் குணமடைந்து நாடாளுமன்றத்துக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எனதுஆசை.
நாட்டு மக்களின் நலனுக்காக வாஜ்பாய் எவ்வளவோ செய்ய வேண்டும். அதனால் அவர் விரைவில் குணமடையவேண்டும் என்று தனது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தாகூர், மகாராஷ்டிரா தலைமை செயலாளர் ரங்கநாதன் ஆகியோர்ப்ரீச் கேன்டி மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி, கேரள முதல்வர் அந்தோணி, திரைப்பட நடிகர் சுனில் தத் ஊள்பட பலர் பிரதமர்விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
யு.என்.ஐ.