ரயில் கொள்ளையர்களைப் பிடிக்கப் புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரயில் கொள்ளையர்களைப் பிடிக்கப் புதிய திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. திலகவதிகூறியுள்ளார்.

காட்பாடி, ஜோலார்பேட்டை பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் அடுத்தடுத்து 6 ரெயில் கொள்ளைச் சம்பவங்கள்தமிழகத்தையே உலுக்கியது.

இதுகுறித்து, ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி மற்றும் டி.ஐ.ஜி. ஆகியோர் தலைமையில் ஆலோசனைநடத்தப்பட்டது. இதில் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக புதிய திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி, ரெயில் ரோந்துப் பணி பட்டியல் ஒன்று புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி ரெயில்வேபோலீஸார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸார் ஆகியோர் கொண்ட குழு களத்தில் இறங்கியுள்ளது.

இவர்கள் ரெயில் நிலையங்களில் மட்டுமில்லாமல், ரயில்வே பாதைகளிலும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவார்கள். கொள்ளையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர, பெண் போலீஸாருக்கு புதிய மெகாபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பிளாட்பாரங்களில்நின்றுகொண்டு, பயணிகளுக்கான முன் எச்சரிக்கை தகவல்களை அவ்வப்போது அறிவித்துக் கொண்டேஇருப்பார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போது பெண் போலீஸார் இந்தப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 80 போலீஸார் அடங்கிய குழு ஒன்று வாரத்திற்கு 2 நாள் ரெயில்வே பிளாட்பாரத்தில் கொடி அணிவகுப்புநடத்துகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும், குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலைஏற்படுத்துவதற்காகவும் இந்த அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+