ஜூலை 8 முதல் புதிய "அமிர்தா எக்ஸ்பிரஸ்"
கோவை:
"அமிர்தா எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் ஜூலை 8ஆம் தேதி முதல் பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்குவிடப்படும் என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஓ. ராஜகோபால் அறிவித்தார்.
கோவை அருகே உள்ள எட்டிமடையில் புதிய ரயில்நிலையக் கட்டடத்தை திறந்து வைத்து மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஓ. ராஜகோபால் பேசியதாவது:
அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் எட்டிமடையில் புதிய எக்ஸ்பிரஸ்ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமிர்தா பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழமாக வளர்ச்சி பெறும்போதுஇங்கு மேலும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ்ரயில் விடப்படும்.
இந்த ரயிலைத் தவிர, நாகர்கோவில் முதல் ஹவ்ரா வரை குருதேவ் எக்ஸ்பிரஸ் விடப்படும். சபரி எக்ஸ்பிரஸ்,எர்ணாகுளத்திருந்து புனேவுக்கு அறிமுகப்படுத்தப்படும். மேலும், மறுசாகர் என்ற ரயில், ஜெய்ப்பூர் முதல்எர்ணாகுளம் வரை விடப்படும். இவை அனைத்தும் ஜூலை 8ம் தேதி முதல் துவக்கி வைக்கப்படும்.
பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ்,கோவை வரை நீட்டிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications